Jan 13, 2014

பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு தமிழக அரசின் அண்ணா விருது

பண்ருட்டி ராமச்சந்திரன்

தமிழக அரசு வழங்கும் பேரறிஞர் அண்ணா விருதுக்கு பண்ருட்டி ராமச்சந்திரனும், மகாகவி பாரதியார் விருதுக்கு முனைவர் கு.ஞானசம்பந்தனும், தமிழ்த்தென்றல் திரு.வி.. விருதுக்கு எழுத்தாளர் அசோகமித்ரனும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தமிழுக்குத் தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் பெயராலும், தன்னலமற்ற தலைவர்கள் பெயராலும் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ள திருவள்ளுவர் விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றிட தகுதியான பெருமக்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
விருதுகள் பெறுவோர் பற்றிய விவரம் வருமாறு:
* திருவள்ளுவர் விருது: கவிஞர் யூசி (தைவான்)
* தந்தை பெரியார் விருது: சுலோச்சனா சம்பத்
* அண்ணல் அம்பேத்கர் விருது: பேராயர் முனைவர் எம்.பிரகாஷ்
* பேரறிஞர் அண்ணா விருது: பண்ருட்டி .இராமச்சந்திரன்
* பெருந்தலைவர் காமராசர் விருது: கி.அய்யாறு வாண்டையார்
* மகாகவி பாரதியார் விருது: முனைவர் கு.ஞானசம்பந்தன்
* பாவேந்தர் பாரதிதாசன் விருது: முனைவர் இராதா செல்லப்பன்
* தமிழ்த்தென்றல் திரு.வி.. விருது: அசோகமித்ரன்
* முத்தமிழ்க்காவலர் கி..பெ. விசுவநாதம் விருது: பேராசிரியர் முனைவர் .ஜெயதேவன்
இந்த விருதுகளை நாளை மறுநாள் (ஜன.15) சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக அரங்கில் நடைபெறும் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் வழங்கிட முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். விருது பெறுவோருக்கு தலா 1 இலட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதியுரைச் சான்றிதழ் ஆகியவை வழங்கி சிறப்பிக்கப்படும். மேலும், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் 30 பேருக்கு நிதியுதவி அரசாணைகள் இவ்விழாவில் வழங்கப்படும் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: